சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஈவிகேஎஸ்  சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஈவிகேஎஸ் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.