இசைப் படைப்புகளுக்கு ரூ.1 கோடியே 84 லட்சம் சேவைவரி செலுத்த சொல்லி ஜிஎஸ்டி ஆணையர் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி..பிரகாஷ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜிஎஸ்டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி.வி.பிரகாஷ் குமார் மேல்முறையீடு செய்தார். அதில் இசை படைப்புகளின் காப்புரிமை பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பிறகு, அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் எனவும் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களில் ஜிஎஸ்டி இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து விசாரணையை தள்ளிவைத்தது.