மீ டூ இயக்கமானது ஒரு காலத்தில் திரை துறையை உலுக்கி எடுத்தது. பிரபலமான ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ் டீன் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக நடிகைகள் போர்க் கொடி தூக்கியதும் இந்த இயக்கம் துவங்கியது. இதையடுத்து நடிகர்கள், இயக்குநர்களால் பாலியல் தொல்லைகளுக்குள்ளான நடிகைகள் பலர் வெளியே வந்து துணிச்சலாக மீ டூவில் புகார் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவியிடம் மீடூ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சாய் பல்லவி கூறியிருப்பதாவது “பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமல்லாமல் வாய் மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பெண்களை வாய் மொழியாக திட்டுவது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் துஷ்பிரயோகம் ஆகும். அதுவும் மீ டூவில் தான் வரும்”என்று அவர் கூறியுள்ளார்.