அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து அதிமுவினரால் விமர்சையாக கொண்டாட EPS கேட்டுக்கொண்டிருந்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் காந்தி சாலை பெரியார் தூண் அருகில் நடந்தது.

இந்த விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், பொய்யிலே ஆட்சி செய்யும் ஒரே கட்சி திமுக என விமர்சித்தார். மேலும் சுதந்திர இந்தியாவின் ஈரோடு இடைத்தேர்தலில் தான் அதிகபட்சமாக ஒரு ஓட்டுக்கு 27 ஆயிரம் திமுக கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி மக்களுக்கு 3 வேளையும் அசைவ உணவு கொடுத்து கேவலமான வெற்றி பெற்றுள்ளார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.