அதிமுகவின் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக நிர்வாகி செந்தில் முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் வேட்பாளராக இருந்த அவர், அதன்பின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருடன் நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடரும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஓபிஎஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் இபிஎஸ் அணியில் இணைந்தார். இன்று சென்னையில் இபிஎஸ்ஐ சந்தித்து அவர் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் பின்னரே அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இபிஎஸ் அணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ் அணியின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.