பொள்ளாச்சியில் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, சென்னை அயனாவரம் காவல் ஆய்வாளர் சபரிநாத் உடல் கருகி உயிரிழந்தார். அதேபோல் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த சாந்தியும் இந்த விதத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு உபயோக சாதனமான பிரிட்ஜ் வெடித்து உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.