தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 323 நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.