வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ பி எஃப் சார்பாக நிதி ஆப்கே நிகத் என்னும் பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் திருச்சி மண்டல இ.பி.எப் முதன்மை ஆணையர் முருகவேல் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்திற்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை நாகை மாவட்ட இபிஎஃப் ஒருங்கிணைப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார்.

மேலும் முகாமில் செட்டில்மெண்ட் பெறுவது, இ.பி.எப் சந்தாதாரர்கள் தங்கள் யு.ஏ.என் கணக்கினை பயன்படுத்தும் முறை, வெவ்வேறு இ.பி.எப் கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, ஆதார் வங்கி கணக்குகள் போன்ற தங்களது சுய விவரங்களை தங்களது யு.ஏ.என் கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் 25 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறியுள்ளார்.