மோசடி SMS-கள் மற்றும் மெசேஜ்களை இனம் கண்டு அதில் இருந்து பாதுகாப்புடன் நம்மை காப்பாற்றும் நோக்கில் புது அம்சத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது ட்ரூ காலர் நிறுவனம். ட்ரூகாலர் ஆப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் புது அம்சமானது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சமாகும்.

ட்ரூ காலர் நிறுவனத்தின் தகவல் இந்த அம்சம் சாத்தியமான மோசடி மெசேஜ்கள்/ பிராடு SMS-களிடம் இருந்து பயனர்களை எச்சரிக்கும் மற்றும் காப்பாற்றும். ட்ரூ காலர் நிறுவனமானது இதற்கு பிராடு புரொடெக்ஷன் என பெயரிட்டுள்ளது. இது யூசர் ஃபீட்பேக்  மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்தி மோசடி மெசேஜ்கள்/பிராடு SMS-களை கண்டறியும் ஒரு ஏஐ-அடிப்படையிலான பாதுகாப்பு அம்சம் ஆகும்.