ஈரோடு மாவட்டத்திலுள்ள எஸ்.கே.சி ரோடு முதல் வீதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இன்ஜினியரான மதிவதன சுந்தரம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகரனுக்கும் சுகந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் சந்திரசேகரன் தனது மனைவியை பிரிந்து 7 மாதங்களாக தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த மதிவதன சுந்தரம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்து குழாயின் ஒரு பகுதியை தனது மூக்கில் சொருகியுள்ளார். இதனையடுத்து பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடிக்கொண்டு சிலிண்டரில் இருந்து வந்த கியாசை சுவாசித்து மயங்கி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மதிவதன சுந்தரத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மதிவதன சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.