தென்காசி மாவட்டத்தில் உள்ள மருங்காலகுளத்தில் கூலி வேலை பார்க்கும் லட்சுமணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமாத்தாள்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா(9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் லட்சுமணன் புதிதாக கட்டி வரும் வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக கட்டும் வீட்டை பார்வையிட சென்ற லட்சுமணன் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று லட்சுமணனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.