புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து கொத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்தது.

இதனால் டயருக்கு மேலே உள்ள பலகை உடைந்து பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர். அந்த பெண்களை அரசு பேருந்து டிரைவரும், கண்டக்டரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.