சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலப்பட்டியானூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிலோமி, பிரவீனா(19) என்ற இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் இளைய மகள் பிரவீனா ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பிரவீனா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த ஷீலா தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.