தமிழகத்தில் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.