தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் மட்டும் வாக்குப்பதிவானது மந்தமாக நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவானதும் மந்தமாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்கு பதிவு சதவீதத்தில் சென்னை கடைசி 3 இடங்களை பிடித்துள்ளது. அதன்படி மத்திய சென்னையில் 32.31 சதவீத வாக்குப்பதிவும், தென் சென்னனையில் 33.93 சதவீத வாக்குப்பதிவும், வடசென்னையில் 35.09 சதவீத வாக்குப்பதிவும்  பதிவாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.