திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குளத்துப்பட்டி டி.புதூரில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யலூர் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அய்யலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மரில் வெள்ளைச்சாமி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வெள்ளை சாமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.