தூத்துக்குடி மாவட்டம், எப்பன்குடி புதுமனை சுல்தான்புரத்தில் மழைக்காலத்தில் சேத்தியாபட்டில் உள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 31 வயதான  ஜான் சுந்தர் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் தொழிலாளியான சுந்தர், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானார்.

இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கெர்மன்- க்கு திருமணம் ஆகி 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.