கார்த்திகேயா 2 திரைப்படத்தின் வாயிலாக தெலுங்கு சினிமாவில் பெரிய வெற்றியை பெற்றவர் நடிகர் நிகில் சித்தார்த்தா. இவர் இப்போது ஸ்பை எனும் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் ஜூன் 29ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அண்மையில் கபாலி பட தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி போதைப்பொருள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு சில முக்கிய நடிகைகளின் பெயர்களும் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நடிகர் நிகில் சித்தார்த்தா அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் “தெலுங்கு திரையுலகில் நான் அறிமுகமானபோது சிலர் எனக்கு சிகரெட் புகைக்கும்படி கொடுத்தனர். மேலும் சிலர் drugs கொடுத்து அதனை பயன்படுத்த கட்டாயப்படுத்தினர். எனினும் அதையெல்லாம் விட்டு நான் தள்ளியே இருந்தேன்” என தெரிவித்தார். இவ்வாறு பிரபல ஹீரோ அளித்திருக்கும் பேட்டி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.