விருதுநகர் ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் போதைக்கு அடிமையான சிறுவர்கள், மற்ற இரண்டு சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான காணொளி இன்ஸ்டாகிராமில் வெளியாகித் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் சிறுவர்கள் வரை இவ்வளவு எளிதாகக் கிடைப்பது மாநிலத்தின் பாதுகாப்பற்ற நிலையைத் தெரிகிறது.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பெற்றோர்கள் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டுகின்றனர். “Drug-free society” கனவு என்ன ஆனது? தமிழகத்தைப் போதைப்பொருட்கள் மலிந்த மாநிலமாகச் சீரழித்துள்ள திமுக அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனச் சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.
