தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம், ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகப்புக்கான டோக்கன் கிடைக்காதவர்கள் தற்போது நேரடியாக ரேஷன் கடைகளுக்கே சென்று தங்களுடைய ரேஷன் கார்டுகளை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று பயனடைய  வேண்டும் என்பதற்காகத்தான் டோக்கன் கிடைக்காத ரேஷன் அட்டைதாரர்கள் தற்போது நேரடியாக ரேஷன் கடைகளுக்கே சென்று ரேஷன் கார்டை காண்பித்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.