நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நாடகம் என்று நீங்களே சொல்கிறீர்கள். நாடகமல்ல. ஒரு நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற தேசிய கட்சி… 16 மாநிலங்களில் ஆண்டு கொண்டிருக்கின்ற… ஆளுங்கட்சியாக இருக்கின்ற… தேசிய கட்சி கூட்டணி.

NDA கூட்டணியில் பாரத பிரதமருக்கு பக்கத்திலேயே அவரை உட்கார வைத்துக் கொண்டு அறிவித்திருக்கிறார்கள். அப்படி அறிவித்த பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமை தொடர் நம்பிக்கை பெரும் விதமாக செயல்பட வேண்டும். தொடர்ந்து நம்பிக்கை தரும் அரசியலில் மேற்கொள்ள வேண்டும். மீட்டிங்கில் பேசிட்டு  இங்க வந்து தமிழ்நாட்டுக்கு நாங்க தான் தலைமை என அவர் சொல்லப் போய் தான் ஆரம்பிச்சது இந்த பிரச்சனை.

ஒரு இணக்கமான சூழ்நிலையில் கூட்டணி கட்சியோடு  பேச வேண்டும்.  பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை மாத்துங்க அப்படின்னு சொன்னா ஏத்துப்பாங்களா ? இவங்க அண்ணா திமுக ஏற்றுக் கொள்வார்களா ? ஏற்றுக்க மாட்டாங்க.   அப்புறம் எப்படி இவங்க ஏற்றுக் கொள்வார்கள். தேசிய கட்சி மாநில தலைவரை மாற்றங்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.