ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னப்பதாங்கல் கூட்ரோடு வழியே மாவட்ட ஆட்சியர் வளர்மதி வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதே நேரம் புதுப்பட்டி காலனி பகுதியில் இருந்து தனியார் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களை ஏற்றி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த முட்புதரின் மீது சாய்ந்தது.

இதனை பார்த்ததும் மாவட்ட ஆட்சியர் காரை நிறுத்தி டிரைவர், உதவியாளருடன் இணைந்து பள்ளி குழந்தைகளை மீட்டு காயம் ஏற்பட்டுள்ளதா என பார்வையிட்டார். பின்னர்  செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியை வரவழைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றி வரும் வாகனங்கள் சரியாக உள்ளதா  என்பதை ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.