சென்னை கடற்கரையிலிருந்து மின்சார ரயில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கரும்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்ற மாடு மீது ரயில் மோதியது.

மேலும் மின்சார ரயில் பெட்டிக்கு அடியில் மாடு சிக்கிக் கொண்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரயிலுக்கு அடியில் சிக்கி இருந்த மாட்டை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.