வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியான மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனலட்சுமி வேலூரில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் காட்பாடி கல்புதூர் அருகே சென்ற போது ஒரு முதியவர் சைக்கிளில் குறுக்கே வந்தார்.

இதனால் தனலட்சுமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவரின் மீது மோதி கீழே விழுந்ததால் பின்னால் வந்த மினி வேன் சக்கரத்தில் சிக்கி தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று தனலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.