கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உணவு திருவிழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் பழனிமுத்து, மோகன் சௌந்தரராஜன், பகண்டை கூட்டு ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சீர் பனந்தல் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் லட்சுமி, மேலாண்மை குழு தலைவர் ராசாத்தி, துணைத்தலைவர் கவிதா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயற்கை உணவுகள் பற்றியும், அதில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் பேசப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் கொண்டுவந்த உணவுகளை பார்வையிட்டு வினா கேட்டு அதற்கு சிறப்பாக பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு மாணவர் தருண் முதலாம் பரிசும், ஐந்தாம் வகுப்பு மாணவி தேவதர்ஷினி இரண்டாவது பரிசும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஹேமவர்ஷினி மூன்றாவது பரிசும் பெற்றனர். அவர்களை பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.