விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில் துறையூரில் விவசாயியான இளம்பரிதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பரிதி ஒரு சேனலில் பேப்பர் பிளேட் கட்டிங் இயந்திரம் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் இளம் பரிதியிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 3 கட்டிங் எந்திரங்களை அனுப்பி வைப்பதாக கூறினார்.

இதனை நம்பி இளம்பரிதி பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மர்ம நபர் இளம்பரிதிக்கு கட்டிங் இயந்திரத்தை அனுப்பி வைக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து இளம் பரிதி விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.