ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் சிலர் முறையான உரிமம் பெறாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முறையான உரிமம் பெறாமல் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றம். எனவே சுற்றுலாத் தொழில் முனைவோர் மாவட்ட சுற்றுலா அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். விதிகளை மீறி செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.