காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ஸ்ரீ விஷ்ணு பிளிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கார்த்திக், சரத்குமார், சரத்பாபு, அருண், விஜயலட்சுமி உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினரை மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

நேற்று முன்தினம் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஐந்து வீடுகளிலும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.