திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அக்னிவர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியும், ஆர்வமும் இருக்கும் வாலிபர்கள் தங்களது விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் வருகிற மார்ச் மாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.