காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேடு பெண்கள் நோயாளிகளில் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

இதனையடுத்து சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் கூட்டு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.