சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அதிமுக மாநாட்டில் பேசிய போது,  அருமைத் தோழர்களே… நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர்,  நம்ம எல்லாரையும்  வாழ வைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்காக இங்கே நாமெல்லாம் கூட இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த புரட்சி ஒன்பது மணி நேரம் 10 மணி நேரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருக்கும்போது… அறிஞர் அண்ணா அவர்கள் இருக்கின்ற போது…. அவரை பேசுவதற்கு முன்னால் யார் பேசினாலும் பேச வேண்டாம் எம் ஜி ஆர்-யை பேச சொல்லுங்கள் என்பார்கள். இன்னைக்கி நீங்கள் அத்தனை பேரும் எடப்பாடியாரை பேச சொல்லுங்கள்…  எடப்பாடியாரை பேச சொல்லுங்கள். அதுதான் நம்முடைய கட்சிக்கே கிடைக்கிற வெற்றி. நீங்கள் கொடுக்கிற செய்தி ஸ்டாலினுக்கு போக வேண்டும் தோழர்களே ..

ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம் கொடுத்தோம். அதிலே ஒருங்கிணைப்பாளர் பதவி ஒழிக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் அவர்களை தேர்ந்தெடுத்தோம்.  நிரந்தர பொதுச் செயலாளர்…  இப்போ உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அத்தனையுமே மாண்புமிகு எடப்பாடி தான் இந்த கட்சிக்கு தலைவர் தலைவர் என்று சொல்லியிருக்கிறார்கள்.