கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவாய் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணேரி கரையை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இதனால் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் முன்னிலையில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சக்தி செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகளையும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.