இந்தியாவில் பிரதமர் மோடி, நடிகைகள் ராஷ்மிகா மற்றும் கஜோல் ஆகியோரை deepfake மூலம் தவறாக சித்தரித்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் புதிய விதிகள் வகுக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பத்து நாட்களில் முதல் கட்ட வரையறை பணிகள் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.