கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் சுல்தான்பேட்டை பகுதியில் விஸ்வநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். விஸ்வநாத் கெலமங்கலத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் என்பவர் தனது டிப்பர் லாரிகளுக்கு பெட்ரோல் பங்கில் வழக்கமாக கடனுக்கு டீசல் நிரப்பி வந்துள்ளார். அதற்கான 50 லட்சம் ரூபாய் பணத்தை சீனிவாசன் கொடுக்காமல் பாக்கி வைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் ரூபா பணத்தை கேட்ட போது சீனிவாசனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சீனிவாசன், அவரது மகன் சுரேஷ் உள்ளிட்டவர்கள் ரூபாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரூபா கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசன், அவரது மனைவி அலமேலு, மகன் சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்