நடிகர் தனுஷ்-ன் 50வது படத்திற்கான படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான டீசர் அவரது பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படத்திற்கான அப்டேட்கள் சிலவும் இணையத்தில் கசிந்து வந்த நிலையில், அவரது  50-வது திரைப்படம் சென்னையில்  செட் அமைத்து  110 நாட்கள் இடைவெளி இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட உள்ளது.

 மேலும் சென்னையின் ராயபுரம் பகுதியை முழுவதுமாக செட்டில் உருவாக்க பட குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே நடிகர் தனுஷின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின்  கதை பழிவாங்கும் மற்றும் கேங்ஸ்டர் வாழ்க்கையை அம்சமாக கொண்டிருப்பதாகவும் கூறப்பட , வடசென்னை போல ஓர் தரமான கேங்ஸ்டர் படத்தை எதிர்பார்க்கலாம்.

மேலும்  பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் அவர்கள் இயக்கும்  இரண்டாவது படம் என்பதால், இதை வெற்றிப்படமாக்குவதற்காக மிகப் பெரிய அளவில் கதாபாத்திரங்கள் தேர்வு செய்யவும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்களை  இசையமைப்பாளராக நிர்ணயம் செய்யவும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.