கடலூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலபுரத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலச்சந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில் முனைவராக இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் பாலச்சந்தருக்கு சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். யீஜியோ தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

அதன்படி நேற்று கடலூர் புதுநகரில் இருக்கும் தனியார் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் தமிழ் முறைப்படி பாலச்சந்தருக்கும், யீஜியோவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பாலசந்தர் கூறியதாவது, சமூக வலைதளம் மூலம் நாங்கள் காதலித்தோம். சீனாவுக்கு சென்று அவரை சந்தித்து பேசிய பிறகு எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறினார். இந்நிலையில் தேசம் கடந்து மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்ததை கண்டு உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே மேடையில் பாலச்சந்தரின் சகோதரர் பாலமுருகன், பவித்ராவுக்கு திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.