பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். போட்டிக்கு பிறகு பேசிய அவர், எதிரணியினர் நன்றாகவே பந்து வீசினர். அதனால் எதிர்பார்த்த ரன்களை எங்களால் குவிக்க முடியவில்லை. ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். ஒரு கேட்ச் வாய்ப்பை விட்டு விட்டோம். இருந்தாலும் 19வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றோம் என தெரிவித்தார்.