அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பாதுகாப்பு பணிக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் படையினரை தமிழ்நாடு காவல்துறையினர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.