தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசாலை வெடி விபத்தில் உயிரிழந்ததை கேட்டு வேதனை அடைந்தேன்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்த அய்யம்மாள், சுந்தர்ராஜ், குமரேசன் ஆகிய 3 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் இருளாயி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்திரவிடப்பட்டுள்ளதோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.