நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரியாபட்டிணம் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் மின்னல் தாக்கியது. இந்நிலையில் வடமலை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை டாக்டர் சம்பவ இடத்திற்கு சென்று மாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தார். பின்னர் அந்த மாடு குழி தோண்டி புதைக்கப்பட்டது.