ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி ரோட்டில் வாவி கடை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக பிரமுகராக இருக்கிறார். நேற்று இரவு 8 45 மணிக்கு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஈஸ்வரமூர்த்தி தனது வீட்டு வளாகத்தில் இருக்கும் மண் தரையில் உலக்கையை நிறுத்தினார்.

அந்த உலக்கை ஆடாமல் அசையாமல் எந்தவித பிடிப்பும் இன்றி செங்குத்தாக நின்றதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று செங்குத்தாக நின்ற உலக்கையை பார்த்தனர். சிலர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.