சேலம் மாவட்டத்தில் உள்ள வினோ பாலாஜி நகர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இணைந்து இறைச்சி வறுத்து சாப்பிட்டுள்ளார். அதனை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் தகாத முறையில் பேசி தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ரமேஷுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.