விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வாசுதேவன் அரசு அனுமதி கொடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் நடவடிக்கை எடுத்தார். மேலும் வாசுதேவன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வாசுதேவனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 18 லட்சத்து 58 ஆயிரத்து 144 ரூபாய் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் செலுத்தவும் உத்தரவு பிரதிக்கப்பட்டது.