விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் அசன் அம்மாள்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரோஜா(52) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அசன் அம்மாள் கல்லால் தாக்கி சரோஜாவை கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அசன் அம்மாளுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.