விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பாண்டியன் செம்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும், அவரது மாமா மகள் யமுனாவிற்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று வீட்டிலிருந்த யமுனா திடீரென காணாமல் போய்விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் யமுனாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து தங்கேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் யமுனாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.