கரூர் மாவட்டத்தில் உள்ள சோமுர் பகுதியில் அர்ஜுனன்(58) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அர்ஜுனன் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனவளர்ச்சி குன்றிய 27 வயது பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அர்ஜுனனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அர்ஜுனனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.