திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் குமார் வள்ளியூரை சேர்ந்த சுடலையாண்டி என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சுடலையாண்டி, அவரது நண்பர் முருகேசன் ஆகிய இருவரும் குமாரை குத்தி கொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுடலையாண்டி, முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுடலையாண்டி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.