கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பங்களா மேடு பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்திரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரங்கசாமி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை நினைத்து மன உளைச்சலில் அழுது கொண்டிருந்த பத்திரமாளும் அன்று இரவே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கணவன், மனைவியின் உடல்களை ஒரே நேரத்தில் வெள்ளியங்காட்டில் இருக்கும் மயானத்தில் அருகருகே குழி தோண்டி புதைத்து விட்டனர்.