கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் குடம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. கொல்லங்கோடு நகராட்சியில் 30-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதனை சரி செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தூத்தூர் ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஜோஸ்பில்பின் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் நீச்சல் அடித்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறியதாவது, சாலையில் மழை நீர் தேங்குவதை தடுக்து, ஏவிஎம் கால்வாயை தூர்வாரி பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.