தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக கடந்த 24-ஆம் தேதி TANGEDCO அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் டிஜிட்டல் மற்றும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து சிஏஜி அறிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி மற்றும் இசைவாணை போன்றவற்றை பெற வேண்டி இருக்கிறது. மேலும் விரைவில் அதிமுக ஆட்சியாளர்கள் மீதான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.